/* */

கடன் தொகை கேட்டு தனியார் நிறுவனங்கள் வற்புறுத்துவதாக பெண்கள் குற்றச்சாட்டு .

வாங்குன பணத்தை கொடுக்கணுமோ?

HIGHLIGHTS

கடன் தொகை கேட்டு தனியார் நிறுவனங்கள் வற்புறுத்துவதாக பெண்கள் குற்றச்சாட்டு .
X

கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சிறு, குறு வணிகர்கள் மட்டுமன்றி அன்றாட பிழைப்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சொந்தமாக தொழில் புரிவோர் மற்றும் சாலையோரங்களில் பொருட்கள் விற்போர் ,ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவரும் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இன்னிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனுக்கான மாத சந்தா தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என நிர்ப்பந்திப்பதால் பெண்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில் தங்களது கணவர்கள் பழ வியாபாரம் மற்றும் ஆட்டோ ஓட்டுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளதாகவும், 10 மணி வரை மட்டுமே கடை திறக்க அனுமதி உள்ளதால் வருமானம் இன்றி இருக்கும் போது கடன் சந்தாவை செலுத்த சொல்வது மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. எனவே கால அவகாசம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர் .

மக்கள் நலனில் அக்கறை கொண்ட அதிமுக அரசு சென்ற ஆண்டு ஊரடங்கின் போது இது போன்ற கடன் சந்தா செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கியது. ஆனால் தற்போதைய திமுக அரசு பொதுமக்கள் மீது அக்கறையின்றி இதுபோன்று கடன் சந்தா வசூல் செய்வதை கண்டு கொள்ளாமல் அலட்சியம் காட்டுகிறது.


Updated On: 18 May 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்