/* */

தஞ்சாவூரில் சாவிலும் இணை பிரியாத தம்பதி

தஞ்சாவூரில் மனைவி இறந்த துக்கம், தாங்காத கணவரும இறந்தார்.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் சாவிலும் இணை பிரியாத தம்பதி
X

தஞ்சாவூர் கரந்தை நாராயணன் கொத்தன் தெருவை சேர்ந்தவர் மருதையா (வயது 75). இவருடைய மனைவி ஜெயா (70). இவர்களுக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி மூன்று மகள்கள் ஒரு மகன் மகன் உள்ளனர்.

சமையல் வேலை செய்து வந்த அவர்கள் வயது மூப்பு காரணமாக வேலைக்கு செல்லாமல் தனது மகள் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் ஜெயா வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனை பார்த்து மருதையா மிகவும் மன வேதனை அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஜெயா திடீரென இறந்துவிட்டார். இதையறிந்த மருதையா அதிர்ச்சி அடைந்தார். ஜெயா இறந்த தகவலை அவரது மகள் உறவினர்களுக்கு தெரிவித்தார். அவர்களும் வந்து அடுத்த இறுதி சடங்களுக்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

மனைவி இறந்ததால் மன வேதனையில் இருந்த மருதையா யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். திடீரென இரவு 9 மணி அளவில் மருதையா மூச்சு பேச்சு இன்றி மயங்கி விழுந்தார்.

அவரை உறவினர்கள் எழுப்பிய போது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. மனைவி இறந்த சில மணி நேரத்திலேயே கணவர் இறந்தது உறவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 40 ஆண்டுக்கு மேல் இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதி சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 19 May 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!