/* */

பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி. வேண்டு கோள்

ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமை அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி. வேண்டு கோள்
X

கொரோனா 2 வது அலை பரவல் காரணமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது, இந்நிலையில் 2-வது நாளான இன்று தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் திடீரென ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர், இரவு பத்து மணிக்கு பிறகு வெளியில் வந்த நபர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர், இரவு ஊரடங்கின் போது வெளியில் வரும் நபர்கள் இரண்டு நாட்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அதன் பிறகு வரும் நாட்களில் இரவு நேரத்தில் வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமைகளில் அதிக அளவில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூட கூடாது எனவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்

Updated On: 22 April 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்