/* */

வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் முதியவர்

கொரோனா ஊரடங்கு காரணமாக, உணவுகள் இன்றி தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு, முதியவர் ஒருவர் தினமும் உணவு வழங்கி வருகிறார்.

HIGHLIGHTS

வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் முதியவர்
X

தஞ்சாவூர், பூக்காரத்தெருவைச் சேர்ந்தவர் ராஜ், 56; இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகி விட்டது.

கேட்டரிங் தொழில் செய்து வரும் ராஜ், கொரோனா ஊரடங்கு காரணமாக, தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு, கடந்த ஒரு வாரமாக, மதிய நேரத்தில் பிரியாணி, முட்டை சாதம், பிஸ்கட்டுகளை, ஒரு பேப்பர் பிளேட்டில் வைத்து வழங்கி வருகிறார்..

இதனால், தெரு நாய்கள், ராஜ் வண்டியில் வருவதை கண்டதுமே, குழந்தைகள் போல தாவி குதித்து ஓடி சென்று, வாலை ஆட்டி நிற்கின்றன. இதை பார்த்த பலரும், நெழிச்சியடைந்து அவரை பாராட்டுகின்றனர்.

இது குறித்து ராஜ் கூறுகையில் கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியமும், 200 பேருக்கு உணவு சமைத்து பொட்டலமாக கொடுத்து வருகிறேன். நான் யாரிடம் எந்த உதவியையும் எதிர்ப்பார்ப்பது கிடையாது. கேட்டரிங்கில் வரும் வருமானத்தை கொண்டு, இதை செய்து வருகிறேன். தற்போது, தினமும், 50 நாய்களுக்கு சாப்பாடு வைக்கிறேன். ஊரடங்கு முடிந்தாலும், இதை தொடர வேண்டும் என்பதே எனது ஆசை என அவர் தெரிவித்தார்.

Updated On: 16 May 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்