/* */

தஞ்சாவூரில் 90 ஆண்டு கால பழமையான பாலம் இடிக்கும் பணி தீவிரம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சியின் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த பழைய பாலம் இடிக்கப்படுகிறது

HIGHLIGHTS

தஞ்சாவூரில் 90 ஆண்டு கால பழமையான பாலம் இடிக்கும் பணி தீவிரம்
X

ஸ்மார்சிட்டி திட்டப்பணிகளுக்காக தஞ்சாவூரில் இடிக்கப்படும் பழமையான பாலம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சியின் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்.,90 ஆண்டுகள் பழமையான பாலங்கள் இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதால் தஞ்சையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை நகர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தஞ்சையின் முக்கிய வீதியான காந்திஜி சாலையில் 1934ல் ஆங்கிலேயர் காலத்தில் கல்லணை கால்வாய் அமைக்கும் போது, கட்டப்பட்ட இர்வின் பிரிட்ஜ் என அழைக்கக் கூடிய ஆற்றுபாலம் இடிக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில், மாநில நெடுஞ்சாலை துறை மூலம் 3 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பாலம் இடிக்கக் கூடிய பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தஞ்சை நகர பகுதியில் உள்ள முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காந்தி சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் காந்திஜி சாலையில் செல்ல கூடிய பேருந்துகள் அனைத்தும் பெரிய கோயில் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது . அதேபோல் தஞ்சையின் நகரை இணைக்கும் கரந்தை- வடவாறு வடவாற்று பாலம் இடிக்கப்பட்டு 3 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்டுவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கும்பகோணம், திருவையாறில் இருந்து வரும் வாகனங்கள் வடக்குவாசல் சிரேசரித்திரம் சாலை வழியாக செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On: 9 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  3. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  4. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  5. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  8. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  9. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  10. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!