/* */

தஞ்சை மாநகராட்சியில் வெற்றி பெற்ற 51வார்டு உறுப்பினர்களுக்கு புத்தகம் வழங்கி பதவி பிரமாணம்

தஞ்சை மாநகராட்சியில் வெற்றி பெற்ற 51வார்டு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார்.

HIGHLIGHTS

தஞ்சை மாநகராட்சியில் வெற்றி பெற்ற 51வார்டு உறுப்பினர்களுக்கு புத்தகம் வழங்கி பதவி பிரமாணம்
X

பதவியேற்ற திமுக வார்டு உறுப்பினர்களுக்கு "உங்களில் ஒருவன்" என்ற புத்தகத்தையும், அதிமுக வார்டு உறுப்பினர்களுக்கு "அம்மாவின் கதை" என்ற புத்தகத்தையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு "எட்டாவது வள்ளல்" என்ற புத்தகத்தையும், பாஜக வார்டு உறுப்பினருக்கு "ஊரெல்லாம் சிவமணம்" என்ற புத்தகத்தையும் சான்றிதழ்களோடு வழங்கினார் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்.

நடந்து முடிந்த உள்ளாட்சி நகர்புற சாதாரணத் தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற 42 திமுக மற்றும் கூட்டணி வார்டு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த மாநகராட்சி ஆணையர் அனைவருக்கும் ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" என்ற புத்தகத்தை சான்றிதழோடு வழங்கினார். இதேபோல் அதிமுக வார்டு உறுப்பினர்கள் 7 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, சான்றிதழுடன் "அம்மாவின் கதை" என்ற புத்தகத்தை வழங்கினார். இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஒரு மாமன்ற உறுப்பினருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து "எட்டாவது வள்ளல்" என்ற புத்தகத்தை சான்றிதழோடு வழங்கினார். பாஜக உறுப்பினருக்கு "ஊரெல்லாம் சிவமணம்" என்ற புத்தகத்தையும் வழங்கினார்.

Updated On: 2 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...