தஞ்சை மாநகராட்சியில் வெற்றி பெற்ற 51வார்டு உறுப்பினர்களுக்கு புத்தகம் வழங்கி பதவி பிரமாணம்
தஞ்சை மாநகராட்சியில் வெற்றி பெற்ற 51வார்டு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார்.
HIGHLIGHTS
பதவியேற்ற திமுக வார்டு உறுப்பினர்களுக்கு "உங்களில் ஒருவன்" என்ற புத்தகத்தையும், அதிமுக வார்டு உறுப்பினர்களுக்கு "அம்மாவின் கதை" என்ற புத்தகத்தையும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு "எட்டாவது வள்ளல்" என்ற புத்தகத்தையும், பாஜக வார்டு உறுப்பினருக்கு "ஊரெல்லாம் சிவமணம்" என்ற புத்தகத்தையும் சான்றிதழ்களோடு வழங்கினார் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி நகர்புற சாதாரணத் தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற 42 திமுக மற்றும் கூட்டணி வார்டு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த மாநகராட்சி ஆணையர் அனைவருக்கும் ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" என்ற புத்தகத்தை சான்றிதழோடு வழங்கினார். இதேபோல் அதிமுக வார்டு உறுப்பினர்கள் 7 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, சான்றிதழுடன் "அம்மாவின் கதை" என்ற புத்தகத்தை வழங்கினார். இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஒரு மாமன்ற உறுப்பினருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து "எட்டாவது வள்ளல்" என்ற புத்தகத்தை சான்றிதழோடு வழங்கினார். பாஜக உறுப்பினருக்கு "ஊரெல்லாம் சிவமணம்" என்ற புத்தகத்தையும் வழங்கினார்.