Begin typing your search above and press return to search.
தஞ்சையில் சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜகவினர் போராட்டம்
தஞ்சையில் சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரியை, 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதை கண்டித்து பாஜகவினர், தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொந்தமாக தொழில் செய்வோர், வாடகை இடங்களில் தொழில் செய்பவர்கள், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள், வீடு வாடகைக்கு விடுபவர்கள் என அனைத்து தரப்பினரும் இதனால் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி , தஞ்சை இரயில் நிலையம் அருகில் மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.