/* */

தஞ்சையில் கொள்முதல் குறித்து விவசாயிகளுடன் கலந்தாலோசனை

நெல் கொள்முதல் குறித்து விவசாயிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தஞ்சையில் கொள்முதல் குறித்து  விவசாயிகளுடன்  கலந்தாலோசனை
X

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நிகழாண்டுக்கான குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து " நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்" மூலமாக நெல் கொள்முதல் குறித்த விவசாயிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக நிகழாண்டில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று கொள்முதல் குறித்த கருத்துக்களை முன்வைத்தனர்.. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் , தமிழ்நாடு முதலமைச்சரின் விருப்பத்தின்படி டெல்டா மாவட்டங்களில் மகசூல் அதிகமாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில், தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது, மாவட்டத்தில் 42 ஆயிரம் ஹெக்டேர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 28 ஆயிரம் ஹெக்டேர் நடவுப்பணிகள் நடைபெற்றுள்ளன, 60 ஆயிரம் ஆயிரம் ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்து தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 226 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 7லட்சத்து 80ஆயிரம் மெட்ரிக் டன். நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.. நாளொன்றுக்கு 5000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விவசாயிக்கு எந்த பிரச்சனையுமின்றி முறையாக கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 24 Jun 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...