Begin typing your search above and press return to search.
வ உசி. 151 வது பிறந்தநாள் விழா:அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
தமிழகம் முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 - வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
வ உ சி சிதம்பரனார் 151 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 151 - வது பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், தென்காசி காந்தி சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட வ உ சிதம்பரனார் உருவ படத்திற்கு, திமுக சார்பில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் அக்கட்சியினரும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலத் துணைத் தலைவர் ஐயம்பெருமாள் தலைமையில் அக்கட்சியினரும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.