தென்காசியில் தடுப்பூசி முகாம், மக்கள் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர்
தென்காசியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கான தடுப்பூசி முகாமினைமக்கள் எம்பி, எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து 18 வயது முதல் 44 வரை வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார், சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.
பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் 18 வயது முதல் 44 வயது வரையில் உள்ள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செலுத்தும் சிறப்பு கொரோன தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் மட்டும் 30 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்கள்.
குறிப்பாக கிராமப்புற பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வமாக உள்ளார்கள். மேலும் இத்தடுப்பூசியானது இன்னும் 5 தினங்களில் கொடுக்கப்பட்ட 25000 தடுப்பூசிகளை போட வேண்டும். அடுத்த கட்டமாக 25000 தடுப்பூசி பெற முடியும். ஆகையால் பொதுமக்கள் முழுமையாக நல்லமுறையில் பயன்படுத்தி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்சியில் துணை இயக்குநர் பொது சுகாதாரம் யோகானந்த், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.