Begin typing your search above and press return to search.
பாவூர்சத்திரம்: விதிமீறி அதிக பள்ளி குழந்தைகளை ஏற்றிய ஆட்டோ பறிமுதல்
பாவூர்சத்திரம் அருகே விதிமுறைகளை மீறி அதிகளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவுடையானுர் பகுதியில், அனுமதிக்கப்பட்டதைவிட, அதிக எண்ணிக்கையிலான பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தன.
இதை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரில், மேற்படி மோட்டார் வாகன விதிமுறையை மீறி அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி சென்ற ஆவுடையானூர் ஆட்டோ ஓட்டுனர் ஆத்தியப்பன் (38) மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.