Begin typing your search above and press return to search.
ஊரக உள்ளாட்சித்தேர்தல்: கொடி அணி வகுப்பு நடத்திய போலீசார்
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் நாளை (06.10.2021) முதல்கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், வாசுதேவநல்லூர் மற்றும் மேலநீலிதநல்லூர் ஆகிய ஐந்து யூனியன்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது.
இதை முன்னிட்டு பதட்டமான பகுதிகள் மற்றும் வாக்குச்சாவடிகளில், பொதுமக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதை உணர்த்தும் வகையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது.