/* */

விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவிகள். குளிக்க அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்கின்றனர்.

HIGHLIGHTS

விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
X

குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதித்திருப்பதால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலா பயணிகள்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழையும், அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பேரருவியில் பாதுகாப்பு வளையத்தை தொட்டு தண்ணீர் விழுவதால் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனை கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கொரோனா பரவல் தடை காரணமாக குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மற்ற அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி இல்லை என்றாலும் பரவாயில்லை பார்த்து செல்வதற்காவது அனுமதியுங்கள் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Updated On: 24 July 2021 6:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  2. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  4. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  5. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  8. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’