Begin typing your search above and press return to search.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பால் வெள்ளப்பெருக்கு.
HIGHLIGHTS
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி, ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொரோனா பரவல் தடை காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதமான கால சூழ்நிலை நிலவுவதால் குற்றால அருவி பகுதிகள் ரம்மியமாக காட்சியளிக்கிறது.