/* */

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் அனுஷ்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் அனுஷ்டிப்பு
X

ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் காசி விசுவநாதர் கோயில் அருகே உள்ள காந்தி சிலையின் முன்பு ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரது தலைமையில் காங்கிரஸ் நகர தலைவர் காதர் மைதீன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரபிக், சுப்பிரமணியன், பூமாதேவி, உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் வன்முறை தீவிர ஒழிப்பு பிரச்சனை உறுதிமொழியும் ஏற்றனர்.

Updated On: 21 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...