/* */

கோரிக்கைகள் நிறைவேறாததால் விரக்தியில் தீக்குளிக்க முயன்ற முதியவர்கள்

தொடர்ந்து மனு அளித்து கோரிக்கைகள் நிறைவேறாததால் விரக்தியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்கள்

HIGHLIGHTS

கோரிக்கைகள் நிறைவேறாததால் விரக்தியில்  தீக்குளிக்க முயன்ற முதியவர்கள்
X

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்கள்

தென்காசி மாவட்டம் பூலாங்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வாவாகனி என்ற முதியவர் 10 லட்சம் ரூபாய் தோப்பு குத்தகைப் பணத்தை நாகூர்கனி என்பவர் திருப்பி தர மறுத்ததாகவும், பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை கண்டித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது.

இதே போல் கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலி பட்டி கிராமத்தை சேர்ந்த ராமையா என்ற முதியவர் இடப்பிரச்சனை தொடர்பாக தொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று கோரிக்கை மனுவோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயற்சித்தார்


அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி கோரிக்கை மனுக்களை பெற்றனர். தொடர்ந்து மனு அளித்தும் கோரிக்கைகள் நிறைவேறாததால் முதியவர்கள் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 March 2022 7:27 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  2. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  3. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  7. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  8. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  9. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  10. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது