சுரண்டையில் குருத்தோலை ஞாயிறு பவனி
தென்காசி மாவட்டம் சுரண்டையில் குருத்தோலை பவனியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பிடித்து பவனி வந்தனர்.
புனித ஞாயிறை முன்னிட்டு சுரண்டையில் சிஎஸ்ஐ கிறிஸ்தவர்கள் குருத்தோலை பிடித்து நகரின் முக்கிய வீதிகளில் பவனியாக வந்தனர். இப்பவனியில், சிஎஸ்ஐ புதுச்சுரண்டை சேகர குரு ரெவ.ஸ்டீபன் தலைமையில், சபை ஊழியர் ஜாண், பயிற்சி ஊழியர் அருள்ராஜ், சேகர செயலாளர் சசிகுமார், பொருளாளர் ஸ்டீபன் ஜெபராஜா, திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் அன்னப்பிரகாசம், ராஜகுமார், சபை மன்ற உறுப்பினர்கள் பாலச்சந்திரன், பால்ராஜ், தனபால் ராஜசேகர், சேகர மன்ற உறுப்பினர்கள் ஜேக்கப், பால்ராஜ், ராஜன், ஜேம்ஸ், தினகரன், சதர்சிங், ஜெயசந்திரன் மற்றும் பொறுப்பாளர்கள் ரவீந்திரன், கிருபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பவனி வந்தனர்.
அதே போல் சுரண்டை ஆர்சி சபையின் பங்கு தந்தை லாரன்ஸ் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. சிஎஸ்ஐ சுரண்டை சீயோன் சேகர சபை சார்பில் நடைபெற்ற பவனியில் சேகர குரு ஆல்வின் பிரைட் தலைமையில் திரளான சபை மக்கள் கலந்து கொண்டனர். பங்களாச்சுரண்டை சிஎஸ்ஐ தூய திருத்துவ ஆலயத்தில் நடந்த பவனியில் சேகர குரு ரெவ. வில்சன் தலைமையில் சபை மக்கள் கலந்து கொண்டனர்.