/* */

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, தென்காசியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக தென்காசி மாவட்டம் மாவட்ட ஆட்சியாளர் முன்பு, சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வேண்டும். தொடர்ந்து மக்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டால் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி ராமசுப்பு, தென்காசி நகர தலைவர் காதர் மைதீன், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ், சுரண்டை நகரத் தலைவர் ஜெயபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்