Begin typing your search above and press return to search.
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது
தென்காசி மாவட்டம் பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை தொகுதி எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் வழங்கினார்.
HIGHLIGHTS
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்திரராஜன் துரை தலைமை வகித்தார். சுரண்டை பேரூர் கழக அதிமுக செயலாளர் சக்திவேல், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகள் 507 பேருக்கு இலவச சைக்கிள்களை எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம் ஒன்றிய செயலாளர் இருளப்பன் நகர பொருளாளர் கோபால், கூட்டுறவு வீட்டுவசதி கடன் சங்க தலைவர் மாரியப்பன், ராஜேஷ், அம்மா பேரவை ஜவஹர் தங்கம், இந்திரா அழகுதுரை, தேனம்மாள் தங்கராஜ், சங்கரேஸ்வரன், வெள்ளைச்சாமி, ரவிச்சந்திரன், வாலிபால் பயிற்சியாளர் அழகுதுரை மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மாணவ-மாணவிகள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.