/* */

காளையார்கோவில் அருகே கடத்தப்பட்ட இளைஞர் கழுத்தறுத்து கொலை

பெரியகண்ணனூர் கண்மாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிரவீன் குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

காளையார்கோவில் அருகே கடத்தப்பட்ட இளைஞர் கழுத்தறுத்து கொலை
X

கொலை செய்யப்பட்ட பிரவீன்குமார்.

சிவகங்கை அருகே கீழ குலத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 24). இவர் 2019ஆம் ஆண்டு சிவகங்கை அருகே மாத்தூரை சேர்ந்த பிரசாத் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 2020 ஜூலையில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர் நண்பர்களுடன் காளையார்கோவில் அருகே பெரிய கண்ணனூரில் தங்கியிருந்தார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பிரவீன்குமார் மற்றும் நண்பர்களை சிலர் கடத்திச் சென்றதாக, காளையார் கோவில் போலீசாருக்கு உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பிரவீன்குமாரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பெரியகண்ணனூர் கண்மாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிரவீன் குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பழிக்குப்பழியாக கொலை நடந்து இருக்கலாமா? என்ற கோணத்திலும் கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 3 Dec 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!