/* */

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பூசாரியை சாகும்வரை சிறையில் அடைக்க இராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

HIGHLIGHTS

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பூசாரிக்கு சாகும் வரை சிறை
X

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்தவர் மாசாணமுத்து(வயது54). அந்த பகுதியில் உள்ள சுடலை மாடன் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். இங்கு அதேபகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் வந்து குடும்ப கஷ்டம், உடல்நிலை பாதிப்பு குறித்து கூறியுள்ளார். இராமேசுவரம் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என பூசாரி கூறியதால், தனது 15 வயது மகளை அழைத்துக் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி பூசாரியுடன் ராமேசுவரம் வந்துள்ளார். மறுநாள் பரிகாரம் செய்ய இருந்த நிலையில் விடுதியில் தங்கி இருந்தபோது பூசாரி மாசாணமுத்து சிறுமி என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் தாய் இதுகுறித்து அளித்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்ட பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்து மாசாணமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை இராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்ரா பூசாரி மாசாணமுத்துவை சாகும்வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதோடு, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

Updated On: 15 July 2021 3:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க