Begin typing your search above and press return to search.
இராமேஸ்வரம் பகுதியில் தொடர் கன மழை: சாலைகளில் மழைநீர் தேக்கம்
இராமேஸ்வரம் பகுதியில் நேற்று காலை முதல் தொடர் கனமழை பெய்துள்ளதால், சாலைகளில் மழை நீர் தேங்கியது.
HIGHLIGHTS
இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று காலை முதல், மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து இல்லாமல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், பாம்பன், பகுதியில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மழைநீர் தேங்கியுள்ளதால், சாலைகள் சேதம் அடைந்து, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க, இராமேஸ்வரம் நகராட்சி ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.