/* */

இராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தீவிர கொரோனா பரிசோதனை

இராமேஸ்வரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தீவிர கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

இராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு தீவிர கொரோனா பரிசோதனை
X

சுற்றுலாப்பயணிகளுக்கு கொரோனா சோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர்.

இராமேஸ்வரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் , ஒமைக்ரான் நோய் தொற்று பரவல் எதுரொலியாக ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தீவிர பரிசோதனை, இரண்டு தடுப்பூசிகளும் போடாதாவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளிமாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்று உருமாறி உலக நாடுகளை ஒமிக்ரான் என்ற புதிய வகை தொற்று பரவி வருகிறது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் நகராட்சி பகுதிக்குள் வரும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில வாகனங்களை சோதனை சாவடியை மறித்து முழுமையாக சோதனையிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அனைவரையும் சுகாதார துறையினர் அனுமதித்து வருகின்றனர்.

மேலும் தடுப்பூசி போடாமல் வரும் வெளிமாநிலத்தவர்களை ராமேஸ்வரம் நகர பகுதிக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்தும் வருகின்றனர்.

வெளிமாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களில் உள்ளவர்களை கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்த பின்னர் அவர்களிடமிருந்து ஆதார் கார்டு நம்பர், மொபைல் நம்பரை குறித்த பின்னர் அனுப்பி வைத்து வருகின்றனர்.

Updated On: 11 Dec 2021 10:22 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...