ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமி மாணவர் சேர்க்கை
கல்விப் பயணத்தைத்தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகள் கற்றல் உபகரணங்கள் வழங்கி முதல்வர் வாழ்த்தினார்.
HIGHLIGHTS
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமி தினத்தை முன்னிட்டு வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது
நவராத்திரி விழாவின் முக்கிய நாளான இன்று விஜயதசமி மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது இன்றைய தினம் சரஸ்வதி பூஜைகள் செய்து, சிறு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் அன்றைய தினம் கோவிலிலோ அல்லது பள்ளிகளிலோ பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துச்சென்று, அவர்களுக்கு நெல்லில் தமிழ் எழுத்துக்கள் எழுதி பள்ளி செல்வதற்கு தயார் செய்யும் நிகழ்வு நடைபெறும்.
அதேபோன்று இன்று திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முதல்வர் தங்கம்மூர்த்தி தலைமையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து சரஸ்வதி படத்தின் கீழ் பென்சில் பேனா நோட்டு புத்தகங்கள் ஆகியவை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், பெற்றோர்கள் தங்களது சிறு குழந்தைகளை ஆசிரியர்கள் மூலமாக நெல்லில் எழுத்துகளை எழுதும் நிகழ்வான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜயதசமியை முன்னிட்டு புதிய குழந்தைகள் நெல்லில் எழுதி தங்கள் கல்விப் பயணத்தைத்தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு பள்ளி முதல்வர் இனிப்புகள், கற்றல் உபகரணங்கள் வழங்கி குழந்தைகளை வாழ்த்தினார்.