/* */

புதுக்கோட்டை: பள்ளி மாணவ மாணவியருக்கு தடுப்பூசி முகாம் துவக்கிவைப்பு

புதுக்கோட்டையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டு முகாமை, எம்எல்ஏ முத்துராஜா தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை: பள்ளி மாணவ மாணவியருக்கு தடுப்பூசி முகாம் துவக்கிவைப்பு
X

புதுக்கோட்டையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தொடங்கி வைத்தார்.

கொரோனாவின் மூன்றாவது அலையான ஓமிக்ரான் தொற்று, நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டு இன்று இந்த முகாமினை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இப்ராகிம் பாபு, திமுக நிர்வாகி சத்யா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்