/* */

வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மூன்றடுக்கு பாதுகாப்பு: எஸ்பி ஆய்வு

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

HIGHLIGHTS

வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள்  மூன்றடுக்கு பாதுகாப்பு: எஸ்பி ஆய்வு
X

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தை இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்பொழுது வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி அறைக்குச் சென்று ஆய்வு செய்தார்.

அப்பொழுது வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேவையில்லாமல் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது. ஏஜென்ட்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏதேனும் சந்தேகமிருந்தால் சிசிடிவி காட்சி அறையை மட்டும் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும். வேறு எங்கேயும் அவர்கள் செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது, அதேபோல் வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி ஏந்திய மூன்றடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். குடிப்பதற்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


வாக்கு எண்ணும் மையமான அரசு மகளிர் கல்லூரிக்கு திடீரென ஆய்வு செய்ய உள்ளே வரும்பொழுது மகளிர் காவலர்கள் வெய்யிலில் நின்று கொண்டிருப்பதை பார்த்த கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடனடியாக நகர காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமாரியிடம் வெயிலிலிருந்து காவலர்கள் பாதுகாப்பான நிற்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியது அடுத்து உடனடியாக மகளிர் காவலர்கள் நிற்பதற்கு குடை ஏற்பாடு செய்தார் எஸ்பி. உத்தரவிட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே நகர டிஎஸ்பி செந்தில்குமார் உடனடியாக மகளிர் காவலருக்கு குடை வசதிகளை உடனடியாக செய்து கொடுத்து அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் கூல்டிரிங்ஸ் வழங்கினார்.

இதனை பெற்றுக் கொண்ட காவலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆய்வு பணிக்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவை உடனடியாக செயல்படுத்திய நகர துணை கண்காணிப்பாளர் செயலுக்கு காவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 8 April 2021 10:05 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்