/* */

காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் பரபரப்பு

காவல்துறையினர் அனுமதி வழங்காததால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் பரபரப்பு
X

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காததால் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் எதிரே காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய இணை அமைச்சரின் மகன் வாகனம் மோதி 2 விவசாயிகள் இறந்த சம்பவத்தை கண்டித்தும், விவசாயிகள் குடும்பத்தை பார்க்க சென்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரியங்கா காந்தியை காவல்துறையினர் கைது செய்ததை கண்டித்து இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு, காவல்துறையினர் அனுமதி வழங்காததால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், பிஎல்ஏ ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக வந்து சாலையின் நடுவே நின்று கொண்டனர். காவல்துறையினர் எப்படி இவர்களை அப்புறப்படுத்துவது என தெரியாமல் திகைத்து நின்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Updated On: 5 Oct 2021 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?