/* */

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுதந்திர தின அமுது பெருவிழா: ஆட்சியர் தொடக்கம்

சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடும் வகையில் 15.09.2021 முதல் 02.10.2021 வரை கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பிரசாரம்

HIGHLIGHTS

தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுதந்திர தின அமுது பெருவிழா: ஆட்சியர் தொடக்கம்
X

தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் 75-வது சுதந்திர தினஅமுது பெருவிழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் 75-வது சுதந்திர தின அமுது பெருவிழா கொண்டாடும் வகையில், பொதுமக்களிடையே எல்இடி வாகனம் மூலம், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கூறியதாவது: தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடும் வகையில், 15.09.2021 முதல் 02.10.2021 வரை கிராமப்புறங்களில் தூய்மை, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, மலக்கசிடு மேலாண்மை, நெகிழிக் கழிவு மேலாண்மை தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன்ஒருபகுதியாக இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம், விழிப்புணர்வு பிரசாரம் துவக்கி வைக்கப்பட்டு, 02.10.2021 வரை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும்17.09.2021 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நெகிழிக் கழிவு மேலாண்மை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும்,மாணவர்களுக்கு திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரம் குறித்து கவிதை மற்றும் ஓவியப்போட்டி நடத்துதல், கிராம ஊராட்சிகளின் முக்கியமான பகுதிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், கட்டிடங்களில் சுகாதாரம் குறித்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்துதல், தேசிய நெடுஞ்சாலைகளின் ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சுவர்களில் 'தூய்மை பாரதம்" தொடர்பான சுவர் ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கருப்பசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ)கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



Updated On: 15 Sep 2021 8:14 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்