/* */

பிளஸ்2 பொதுத்தேர்வு : புதுக்கோட்டை மாவட்டத்தில் 19,332 பேர் தேர்வு எழுதுகின்றனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

பிளஸ்2 பொதுத்தேர்வு : புதுக்கோட்டை மாவட்டத்தில் 19,332 பேர் தேர்வு எழுதுகின்றனர்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான இடைநிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021 - 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மே 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 05.05.2022 அன்று தொடங்கி 28.05.2022 வரை நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 19,332 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் 91 தேர்வு மையங்களும் தனித் தேர்வர்களுக்கு 02 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 160 பறக்கும் படை நிலையான அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 11- வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.05.2022 அன்று தொடங்கி 30.05.2022 வரை நடைபெறவுள்ளது. இதில் 23,298 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.மாவட்டத்தில் 119 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கு 02-தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 190 பறக்கும் படை நிலையான அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 11 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு: மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் 10.05.2022 அன்று தொடங்கி 31.05.2022 வரை நடைபெறவுள்ளது. இதில், மாணவ, மாணவிகள் 21,017 பேர் தேர்வு எழுதவுள்ளனர். 91 தேர்வு மையங்களும் 02 தனித் தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அமைக்கப்பட்டுள்ளன. 160 பறக்கும் படை நிலையான அலுவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். 11 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளை சுமுகமான முறையில் நடத்திட தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்வசதி, கழிவறை வசதி, மின்வசதி ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டு சிறப்பாக தேர்வுகளை நடத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் அனைவரும் தங்களது கல்வியில் முழுகவனம் செலுத்தி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.




Updated On: 4 May 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்