புதுக்கோட்டை நகரில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
பொதுமக்களுக்கு காவல்துறையினர் முகக் கவசங்கள் வழங்கி, அதை அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
HIGHLIGHTS
புதுக்கோட்டையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாளை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு பொதுமக்கள் தனிமனித இடைவெளி மற்றும் முகக் கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது மீதி வருபவர்கள் காவல்துறை மூலம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அருகே மாலை நேரத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் வரும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியில் கடைபிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் முகக் கவசங்கள் வழங்கி முகக் கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். மேலும் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த பொதுமக்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.