/* */

கால்நடைகளை நன்றாக வளர்த்த உரிமையாளர்களுக்கு எம்எல்ஏ முத்துராஜா பரிசளிப்பு

சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா சிறந்த கால்நடைகளை வளர்த்த கால்நடை உரிமையாளருக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்

HIGHLIGHTS

கால்நடைகளை நன்றாக வளர்த்த உரிமையாளர்களுக்கு  எம்எல்ஏ முத்துராஜா பரிசளிப்பு
X

புதுக்கோட்டை அருகே சிறப்பாக கால்நடைகளை வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிய எம்எல்ஏ முத்துராஜா

கால்நடைகளை சிறந்தமுறையில் வளர்த்த உரிமையாளர்களுக்கு எம்எல்ஏ முத்துராஜா பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

தமிழக அரசு சார்பில் கால்நடைகள் வளர்ப்போருக்கு மானிய விலையில் ஆடு ,மாடு, கோழி உள்ளிட்டவைகளை அரசு மானிய விலையில் வழங்குகிறது. மேலும் அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கோமாரி நோய் உள்ளிட்டவைகளில் இருந்து கால்நடைகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. மேலும் கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பாக அரசு வழங்கிய கால்நடைகளை வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கியும் கால்நடை வளர்ப்பு முறை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை, புதுக்கோட்டை மாவட்டம் மாந்தாங்குடி பகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை புதுக்கோட்டை எம்எல்ஏ மருத்துவர் முத்துராஜா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

மேலும், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா சிறந்த கால்நடைகளை வளர்த்த கால்நடை உரிமையாளருக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார் . இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் அப்பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கால்நடைகளின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்