/* */

புதுக்கோட்டையில் மார்க்கெட் மூடல் பூ வியாபாரிகள், விவசாயிகள் வேதனை

புதுக்கோட்டை பூ மார்க்கெட் மூடப்பட்டதால், விவசாயிகள், வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரம்பரிய பூ மார்க்கெட் பல வருடங்களாக இயங்கி வந்தது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த கட்டுப்பாட்டால் நகராட்சி அலுவலர்கள் பூ மார்க்கெட்டில் தகரம் வைத்து அடைத்து சீல் வைத்தனர்.

இதனால் இன்று காலை பூ வியாபாரம் செய்ய வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பூமார்க்கெட் வெளியே சாலையோரங்களில் பூக்களை மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்து விற்பனை செய்தனர்.

அங்கு வந்த நகராட்சி அலுவலர்கள் தடுத்து, அங்கிருந்து பூக்களை அகற்றி பூ வியாபாரம் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் இன்று பூக்களை அறுவடை செய்து கொண்டு வந்த விவசாயிகள் மற்றும் பூ வாங்கி வந்த வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. தொடர்ந்து இதே நிலை ஏற்பட்டால் எங்களுக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்படும் எனவும் வேதனையுடன் பூ வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

சமூக இடைவெளியோடு பூக்கள் விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் இடம் தேர்வு செய்து தந்து, பூ வியாபாரிகள் மற்றும் பூ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 27 April 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...