புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை
கல்வி சங்கல்ப பூஜையில் பங்கேற்ற மாணவ, மாணவிகளில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது
HIGHLIGHTS
புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை தெற்கு4ம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அரசு பொது தேர்வு ஏழுதும் 10ம் வகுப்பு,பிளஸ்1, பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிபாடு ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது. இதில் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கே.மணி குருக்கள் தலைமையில் சிறப்பு வழிபாடுநடந்தது.
கல்வி சங்கல்ப பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு அனுமன் திருச்சபையினர் சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது. இதையொட்டி, மாணவ,மாணவிகளுக்கு பேனா, குறிப்பேடுகள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை பாக்கியராஜ், இலக்கியப்பேரவை நிலவைப்பழனியப்பன், கல்வியாளர்கள் மாலதிசெந்தில்வேல் , கணினி ஆசிரியர் சந்திரசேகர், கல்லூரி பேராசிரியர் நாகேஸ்வரன், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் , கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, அனுமன்,திருச்சபையினர், ஆன்மிகநெறியாளர் ஆனந்தன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது