திமுக அரசை கண்டித்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வீட்டின் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
HIGHLIGHTS
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது வீட்டின் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 80 நாட்களைத் தாண்டிய நிலையில், தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளான நீட் தேர்வை ரத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வில் மாணவர்களை ஏமாற்றிய திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் தனது வீட்டின் முன் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதேப்போல், புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகராட்சி முன்னாள் தலைவர் ராஜசேகரன், துணைத் தலைவர் சேட் உள்ளிட்ட அதிமுகவினர் தங்களுடைய வீடுகள் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.