/* */

காண்போரை கவர்ந்த ராணுவபடை அணிவகுப்பு

காண்போரை கவர்ந்த ராணுவபடை அணிவகுப்பு
X

சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டையில் நடைபெற்ற துணை ராணுவப் படையின் கொடி அணிவகுப்பு காண்போரை கவர்ந்தது.

சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சாஸ்த்திர சீமா பால் கம்பெனியை சேர்ந்த 92 துணை ராணுவ படையினர் வந்தடைந்தனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் மத்திய துணை ராணுவப் படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

புதுக்கோட்டை அரசு பொது வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பு கீழராஜ வீதி, வடக்குராஜவீதி, பிருந்தாவனம், மேலராஜவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானம் அருகே நிறைவடைந்தது.இதில் 92 துணை ராணுவப்படையினர் மற்றும் அதிரடிப்படை போலீசார் 50கும் மேற்பட்டோர் நகரின் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு வந்த காட்சி காண்போரை கவர்ந்தது.

Updated On: 3 March 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்