Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்சி நடைபெற்றது
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை கல்லூரி மற்றும் அம்மாபாளையம் ஊராட்சி மன்றம் மூலம் பசுமைப் புரட்சி செய்யும் விதமாக, மரக்கன்றுகளை நட்டு வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன், அம்மாபாளையம் ஊராட்சியில் உள்ள மருத்துவமனை, பள்ளிக்கூடம், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன
அம்மாபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் பிச்சை பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜோஸ்பின் சுப்பிரமணி, பால் உற்பத்தி கூட்டுறவு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் செயலாளர் ஜெய்சங்கர், பொதுமக்கள் உள்ளிட்ட ஊராட்சி மன்ற அலுவலர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.