முதியோர் இல்லங்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்களளுக்கு பதிவு சான்றிதழ் கட்டாயம்
முதியோர் இல்லங்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் இல்லையென்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு
HIGHLIGHTS
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா கூறியதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள் நடத்தும் தொண்டு நிறுவனங்கள், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007ன் கீழ் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு சான்று பெற்றிருந்தால் மட்டுமே இயங்க வேண்டும்.
முதியோர் இல்லங்கள் நடத்தி வரும் தொண்டு நிறுவனங்கள் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007ன் கீழ் பதிவு செய்யாதவர்கள் உரிய சான்றிதழ்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 19.07.2021க்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு சான்று பெறாமலும் பதிவு செய்ய விண்ணப்பிக்காதவர்கள் 19.07.2021க்குப் பிறகு முதியோர் இல்லங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் முதியோர் இல்லங்கள் நடத்துவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.