Begin typing your search above and press return to search.
பெரம்பலூரில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவால் நோய் பரவும் அபாயம்
பெரமபலூர் மாவட்டத்தில் சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட நகரப் பகுதியான துறைமங்கலம், மூன்று ரோடு, 4ரோடு , திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவக் கழிவுகள்பயன்படுத்தப்பட்ட ஊசிகள் , மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்படுகின்றன.
மேலும் இதன் மூலம் நோய் தொற்று பரவும் சூழல் உருவாகி உள்ளது. மாவட்டம் மற்றும்நகராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் தொடர்ந்து கொட்டப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.