/* */

பெரம்பலூர் அருகே தீ விபத்து : ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

பெரம்பலூர் அருகே இன்று பிற்பகலில் நடந்த தீ விபத்தில் கூலித் தொழிலாளி ஒருவரின் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே தீ விபத்து :  ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
X

பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள கொட்டரை கிராமத்தில் ஆதி திராவிடர் தெருவில் வசிப்பவர் குமரன் பார்வதி தம்பதியினர்.


இவர்கள் துக்க நிகழ்விற்காக வெளியூர் சென்றிருந்த நிலையில் அவர்களின் வீடு இன்று மதியம் மர்மமான முறையில் தீ பிடித்து எரிய தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முற்பட்டார்கள். இருந்த போதும் வீடு முற்றிலும் தீக்கிரையானது.


கிராமத்தின் கீழ்புறமாக இருந்த வீட்டில் தீப்பிடித்ததால் தீ மேலும் பரவாமல் அதிர்ஷ்ட வசமாக மற்ற வீடுகள் தப்பின. இதனிடையே செய்தி அறிந்து தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீய௭ற்கு அணைத்தனர். மருவத்தூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Jun 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க