/* */

பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கி

பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கியை கலெக்டர் ஆய்வுய செய்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கி
X
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள சின்ன வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கியை கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செட்டிக்குளம் ஊராட்சியில் வெங்காயம் பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிட்டங்கியை மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றும் விதத்தில் இம்மையம் உருவாக்கப்பட்டு உள்ளது.. சின்ன வெங்காயத்திலிருந்து மதிப்புக் கூட்டுதல் முறையில் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், உற்பத்தி செய்த மதிப்புக் கூட்டுப் பொருட்களை விற்பனை செய்வதற்கும் இம்மையத்தில் வெங்காய மதிப்பு கூடுதல் இயந்திர அலகு, 50 மெட்ரிக் டன் அளவு குளிர்சாதன சேமிப்பு கிடங்கு, 50 மெட்ரிக் டன் அளவில் சேமிக்க கூடிய சேமிப்பு கிடங்கு, விவசாய உற்பத்தி பொருட்களை ஏலம் விடுவதற்கு ஏதுவான வளாகம், சூரிய உலர்த்தி, சிற்றுண்டி மையம், 10 கடைகள் உள்ளிட்டவைகள் அடங்கிய ஒரு வணிக வளாகமாக உள்ளது.

இந்த வணிக வளாகத்தினை தங்களது வெங்காய உற்பத்தி பொருட்களை சேமித்து வைத்து பயனடையவும், வளாகத்தினை முறையாக பேணி பராமரித்திட வழிவகை செய்யவும், மேலும் விவசாயிகள் தங்களது வெங்காய உற்பத்தி பொருட்களை சேமித்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றிக் கொள்ளவும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) பாத்திமா, துணை இயக்குநர்(வேளாண் விற்பனை) சிங்காரம் வேளாண்மை அலுவலர் நாகராஜன், உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்னவேணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Sep 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’