/* */

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

பெரம்பலூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது
X

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் தலைமையில் பெரம்பலூர் காவல்துறையினர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பெரம்பலூர் நகரில் விற்பனை செய்யப்படுகின்றதா என சிறப்பு ரோந்து மேற்கொண்டனர்.

இந்நிலையில் பெரம்பலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியன் தனக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி காவலர்களுடன் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே சென்று பார்த்தபோது ஒரு நபர் வெள்ளை தாளில் வரிசையாக எண்களை எழுதி வைத்துக்கொண்டிருந்தவரை விசாரிக்க, அவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையொட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணியன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த தர்மராஜ் (33) என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து லாட்டரி விற்ற பணம் ரூபாய் 9300/- பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 30 Sep 2021 3:33 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  2. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  3. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  4. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  5. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...
  7. ஈரோடு
    ஈரோட்டில் 100 டிகிரிக்கு கீழ் குறைந்த வெயில்: இன்று 96.44 டிகிரி
  8. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  9. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!