/* */

செய்தித்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் பேச்சு: ராசிபுரத்தில் நேரலை

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை உருவப்படத்திற்கு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

செய்தித்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் பேச்சு: ராசிபுரத்தில் நேரலை
X

டிஜிட்டல் வீடியோ வாகனத்தின் மூலம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பஸ் நிலையம் அருகில் பொதுமக்கள் பார்வைக்காக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது

தமிழக சட்டசபையில், செய்தித்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசிய நிகழ்வு, ராசிபுரத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் நவீன டிஜிட்டல் வீடியோ வாகனம் மூலம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தமிழ்நாடு சட்டசபையில், மானியக் கோரிக்கையின் போது, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், நவீன டிஜிட்டல் வீடியோ வாகனம் மூலம் ராசிபுரத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசின் 2023-24ம் ஆண்டின், பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போது துறை ரீதியாக மானியக் கோரிக்கையின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. மானிய கோரிக்கை அறிவிப்புகள் பொதுமக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்திடும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று, சட்டசபையில் நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பர துறையின் மானிய கோரிக்கையில் எம்எல்ஏக்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதில் அளித்துப் பேசி, துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் செய்தித்துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் பேசி நிகழ்வு, நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு மூலம், அதிநவீன டிஜிட்டல் வீடியோ வாகனத்தின் மூலம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பஸ் நிலையம் அரகில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும் டிவிட்டர், வாட்ஸ்அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக செய்தி துறையின் மானிய கோரிக்கையை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழ் பெரியோர், தலைவர்களின் சிலைகள், திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களின் நினைவில்லத்தில் வைக்கப்பட்டுள்ள, அவரது திருவுருவப்படத்திற்கு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், ஜேடர்பாளையம் காவிரிக் கரையில் அமைந்துள்ள காவேரி ஆற்றில் ராஜவாய்க்கால் அமைத்த அல்லாள இளைய நாயக்கர் திருவுருவச் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On: 11 April 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு