/* */

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர்

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் சட்டப்படி ஆயுள் தண்டனை விதிக்கப்படும், என நாமக்கல் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஆயுள் தண்டனை: கலெக்டர்
X

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 18 வயது நிறைவடையாத பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் தொல்லை தருவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும், 18 வயது நிறைவடையாத ஆண், பெண் குழந்தைகளைப் பாலியல் நோக்கத்தோடு பின்தொடர்வது, கண்காணிப்பது, சைகைக் காட்டுவது, ஆபாச படம் காண்பிப்பது, படம் எடுப்பது, பாலியல் ரீதியாக துன்புறுத்துவ, பாலியல் உறவு கொள்வது உள்ளிட்டக் குற்றங்களுக்கு, சட்டப்படி 6 மாதம் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் தன்னம்பிக்கை இழந்து தங்களது வாழ்வின் முன்னேற்றப் பாதையை அடையாமல் மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்துவிடுவார்கள். இது சம்மந்தமாக தகவல் அளிக்க விரும்புவோர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம், 04286 - 233103 என்ற தொலைபேசி எண்ணிலும், சைல்டு லைன் 1098 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டும் தகவல் அளிக்கலாம். தகவல் கொடுப்போரின் விவரம் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?