/* */

கோவையில் வரும் 17ம் தேதி அஞ்சல் துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்

கோவையில் வரும் 17ம் தேதி அஞ்சல் துறை வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

கோவையில் வரும் 17ம் தேதி அஞ்சல் துறை வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம்
X

இதுகுறித்து, நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
|
அஞ்சல்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 17ம் தேதி வெள்ளகிக்கிழமை கோவை, ரத்தினசபாபதிபுரத்தில் உள்ள போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. அஞ்சல்துறை வாடிக்கையாளர்கள், தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதேனும் இருந்தால் தங்கள் புகார்களை உதவி இயக்குனருக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

புகார் அனுப்பும் அஞ்சலக உறையின் மீது, 'அஞ்சல்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் மனு சம்பந்தமாக' என்று எழுத வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாகவும் கலந்து கொள்ளலாம். புகார் கடிதத்தில் முழு தகவல்களும் குறிப்பிட வேண்டும். அதாவது அனுப்பும் முகவரி, அனுப்பிய முகவரி, ரிஜிஸ்டர் தபால் அல்லது ஸ்பீடு போஸ்ட் அல்லது மணியார்டர் எண் எந்த அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது, அனுப்பப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டும்.

புகார்கள் சேமிப்பு கணக்கு அல்லது அஞ்சல் ஆயுள் இன்சூரன்ஸில் இருப்பின், அதன் விபரங்களை குறிப்பிட வேண்டும் என , செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Sep 2021 12:45 PM GMT

Related News