Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் வரும் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகிக்கிறார். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள, வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலிருந்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வீடியோகான்பரன்சிங் மூலம் மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும், கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் காலை 10 மணிக்குள், சம்மந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.