நாமக்கல்லில் 24ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24ம் தேதி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகததில் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெறுகிறது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.
விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரங்களில் (தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள வெண்ணந்தூர் மற்றும் எருமப்பட்டி ஒன்றியம் தவிர) உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலிருந்து கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து விவசாயிகள் கலந்துகொண்டு, வீடியோ கான்பரன்சிங் மூலம் கலெக்டரிடம் கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.
கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் 24ம் தேதி காலை 10 மணிக்குள் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.