/* */

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவு

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவை அமைச்சர் மற்றும் எம்.பி வழங்கினர்.

HIGHLIGHTS

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில்  கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவு
X

மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், பணிக்காலத்தின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, பணி நியமன உத்தரவுகளை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் வழங்கினர்.

மோகனூரில் உள்ள, கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் மற்றும் எம்.பி வழங்கினர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்கரை ஆலையில், பணிக்காலத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி, ஆலை மேலாண்மை இயக்குனர் மல்லிகா தலைமையில் நடைபெற்றது. ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இறந்த தொழிலாளர்களின் வாரிசுகள் 38 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலை விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நவலடி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சரஸ்வதி, திமுக பிரமுகர்கள் சரவணன், உடையவர், அர்ஜுனன், செல்லவேல், அருணகிரி, கோபால், ஆலை நிர்வாக குழு துணை தலைவர் ராக்கியண்ணன், இயக்குநர்கள் வரதராஜன், கு ப்புதுரை, ஜெயராஜ், தங்கம்மாள், ராமலிங்கம் மற்றும் பூவராகவன், ராஜாகண்ணன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆலை நிர்வாகக்குழு தலைவர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Updated On: 14 Jan 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  7. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  8. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  9. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  10. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!