Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் வரும் ஆக.3ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான, மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருகிற ஆக.3ம் தேதி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
இது குறித்து மாவட்ட கலெக்டர்ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான, ஜூலை மாத குறைதீர் கூட்டம் வருகிற ஆக.3ம் தேதி காலை 10.30 மணிக்கு ஆன்லைன் மூலம், வீடியோ கான்பரசிங் வழியாக நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கலெக்டரிடம் தங்களது கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.
கோரிக்கைகளை தெரிவிக்க உள்ள விவசாயிகள், ஆக.3ம் தேதி காலை 10 மணிக்குள், சம்மந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.