/* */

மோகனூர் சர்க்கரை ஆலைக்கு மாநில அளவில் சிறந்த செயல் திறனுக்கான 3 ஆம் பரிசு

தமிழகம், புதுச்சேரி மாநில அளவில், நடப்பு கரும்பு அரவை பருவத்தில் சிறந்த செயல்திறனுக்கான, 3ஆம் பரிசு மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மோகனூர் சர்க்கரை ஆலைக்கு மாநில அளவில் சிறந்த செயல் திறனுக்கான 3 ஆம் பரிசு
X

பைல் படம்

இந்தியன் வேளாண் ஆராய்ச்சி கழகம், கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனம் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான, 52வது கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. அதில், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும், கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள், 2020–21ம் ஆண்டு, கரும்பு அரவை பருவத்தில், செயல்பாடுகளின் அடிப்படையில், ஒட்டு மொத்த சிறந்த செயல்திறனுக்கான, 3ம் பரிசை, மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பெற்றது.

அதற்கான விருது, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனர் மல்லிகாவிடம் வழங்கினர்.

இவ்விழாவில், குறைந்த பரப்பில் அதிக மகசூல் எடுத்த, பாலப்பட்டி கோட்டம் கரசப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி முதல் பரிசும், மோகனூர் மேற்கு கோட்டம், முத்தூர் கிராமத்தை சேர்ந்த கோபிநாத்துக்கு 2ம் பரிசும், வேளாண் துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. வரும் அரவைப் பருவத்தில், ஆலை அதிக அளவில் கரும்பு அரவை செய்து, தமிழகம், புதுச்சேரி மாநில அளவில் சிறந்த செயல்திறனுக்கான முதல் பரிசை பெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆலையின் மேலாண் இயக்குனர் மல்லிகா கேட்டுக் கொண்டார்.

Updated On: 15 May 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை