/* */

அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

சமூக பரவல் அதிகரித்துள்ளதால் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும், குடும்பத்திற்கு ஒரு பல்ஸ் ஆக்சி மீட்டர் வழங்க வேண்டும். முன்னால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்..

HIGHLIGHTS

அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும்:    முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி
X

நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக செயலாளரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் நாகையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கையில் :

நாகையில் 5 சதவிகிதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது என்பதற்கு சான்றாகும்

எனவே தடுப்பூசி அனைவருக்கும் எளிதாக கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசித்தால் மட்டுமே கலநிலவரம் தெரியும் எனவும், உயிர் காக்க வேண்டிய பிரச்சனையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி பாரபட்சம் காட்ட கூடாது என்றார்.

மேலும் நாகை மாவட்டத்தில் சமூக பரவல் அதிகரித்துள்ளதால் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளை தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற வேண்டும் . குடும்ப அட்டைக்கு 2000 ரூபாய் வழங்குவது போல் பல்ஸ் ஆக்சி மீட்டர் குடும்பத்திற்கு ஒன்று வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும் 108 சேவையை அதிகரிக்க வட்டார அளவிலான ஒருங்கிணைப்பை தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்த வேண்டும் எனவும், தற்பொழுது கொரோனா தொற்றால் இறப்பு எண்ணிக்கை அதிகம் ஏற்படுவதாகவும் அதனை மறைத்து தமிழக அரசு குறைவான எண்ணிக்கையை வெளியிடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் கொரோனா தொற்றின் காரணமாக கர்பினி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூட அரசு தயங்குவதாக வும் தெரிவித்த அவர் ஊரடங்கு மேலும் கடுமையாக்க வேண்டும் எனவும், நோய்த்தொற்றை குறைக்க அதிதீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கோரிக்கை விடுத்தார்.

Updated On: 25 May 2021 4:11 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்